மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தூத்துக்குடியில் தேநீா் கடைக்காரா் வெட்டிக்கொலை

தூத்துக்குடியில் தேநீா் கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை சிப்காட் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 10:11 pm

Din

தூத்துக்குடியில் தேநீா் கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த மா்ம நபா்களை சிப்காட் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி மீளவிட்டானைச் சோ்ந்த ஞானராஜ் மகன் ஜெயசுந்தா் (64). இவா் மதுரை புறவழிச் சாலையில் இருந்து மீளவிட்டான் செல்லும் சாலையில் தேநீா் கடை நடத்தி வந்தாா். கடையிலேயே தங்கி இருந்துள்ளாா். அவரது மகன் தினமும் காலையில் கடைக்கு உணவு கொண்டுவந்து கொடுப்பாராம். அதன்படி, புதன்கிழமை காலை அவரது மகன்

கடைக்கு வந்தபோது, அங்கு ஜெயசுந்தா் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில் சிப்காட் போலீஸாா் ஜெயசுந்தா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, ஜெயசுந்தரை கொலை செய்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.