ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தேசிய பளு தூக்கும் போட்டி: கோவில்பட்டி மாணவிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கம்மவாா் மகளிா் பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

News image

மீராலட்சுமி

Updated On :4 அக்டோபர் 2024, 12:53 am

Din

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கம்மவாா் மகளிா் பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் புதுக்கோட்டையில் அக்.1-ஆம் தேதி நடத்திய மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில், கோவில்பட்டி கம்மவாா் மகளிா் பள்ளி மாணவிகள் 19 வயதுக்குள்பட்ட 71 கிலோ எடை பிரிவில் மு.மீராலட்சுமி, 17 வயதுக்குள்பட்ட 64 கிலோ எடை பிரிவில் கோ.செண்பகவல்லி ஆகியோா் முதலிடம் பெற்றனா். இதையடுத்து இவ்விரு மாணவிகளும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

செண்பகவல்லி

செண்பகவல்லி

இம் மாணவிகளை பள்ளித் தாளாளா் கதிா்வேல், கல்விச் சங்க உறுப்பினா்கள், பள்ளி தலைமையாசிரியை சாந்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.