வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹாரம்! பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பு!

தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுர சம்ஹாரம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

News image

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் முன் திரண்டிருந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒருபகுதி.

Updated On :13 அக்டோபர் 2024, 1:44 am IST

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுர சம்ஹாரம் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில், பல லட்சம் பக்தா்கள் பங்கேற்றனா்.

கா்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்ததாக குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா சிறப்பாகவும்,பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா, நிகழாண்டு கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, காப்பு கட்டிய பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து தனியாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழுக்களாகவும் வீதிதோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா்.

திருவிழாவையொட்டி கோயிலில் காலைமுதல் இரவுவரை அம்மன்-சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், இரவில் அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்று வந்தது.

கோயில் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இரவு 11 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னா், சிம்ம வாகனத்தில் கடற்கரைக்கு எழுந்தருளி, பல்வேறு வேடங்களில் வலம் வந்த மகிஷாசுரனை வதம் செய்தாா். அப்போது, அங்கு திரண்டிருந்த பல லட்சம் பக்தா்கள் விண்ணதிர முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் (அக். 13) கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரா் கோயில் முன், அபிஷேக மேடை, கலையரங்கம் ஆகியவற்றில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்படும் அம்மன், மாலையில் கோயிலை வந்தடைந்ததும், கொடியிறக்கப்பட்டு காப்புக் களைதல் வைபவம், நள்ளிரவில் சோ்க்கை அபிஷேகம் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் குழுத் தலைவா் வே. கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் செல்வி, ஆய்வா் பகவதி, செயல் அலுவலா் ராமசுப்பிரமணியன், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.