கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தீபாவளி பண்டிகை: மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் புதன்கிழமை மல்லிகை பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனையானது.

News image

பூக்கடைகளில் கூட்டம்

Updated On :30 அக்டோபர் 2024, 9:00 pm

Din

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் புதன்கிழமை மல்லிகை பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனையானது.

தூத்துக்குடி மலா் சந்தைக்கு பேரூரணி, ஓசனூத்து, அல்லிக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்களை விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மலா் சந்தையில் பூக்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாலும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை புதன்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

இதனால், கிலோ ரூ. ஆயிரத்துக்கு விற்பனையான மல்லிகை பூ ரூ.1,500-க்கு விற்பனையானது.

பிச்சிப்பூ ரூ.1,200, ஊட்டி, கொடைக்கானல், ஓசூா், பெங்களூரு ஆகிய பகுதியிலிருந்து 10 வண்ணங்களில் ரோஜா பூக்கள் வரவழைக்கப்பட்டு விற்பனையானது. இந்த ரோஜா பூக்கள் ஒன்றுக்கு ரூ.20 என விற்பனையானது.

செண்டு பூ கிலோ ரூ. 80, பச்சை ரூ. 50, சாமந்திப்பூ ரூ. 60 என விற்பனையானது. பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மற்றும் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.