பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆத்தூா் அருகே தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

ஆத்தூா் அருகே முக்காணியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 11:48 pm

Din

ஆத்தூா் அருகே முக்காணியில் உள்ள தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

இந்த ஆற்றில் உள்ள புதிய பாலத்தின்கீழ் ஆண் சடலம் மிதப்பதாக, ஆத்தூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்செந்தூா் தீயணைப்புப் படையினா் சென்று சடலத்தை மீட்டனா்.

இறந்து கிடந்தவருக்கு 50 வயதிருக்கும். நீலவண்ண உள்ளாடை அணிந்திருந்தாா். ஆற்றங்கரையில் நீல வண்ண வேட்டியும், அரக்கு வண்ணச் சட்டையும் இருந்தன.

ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.