பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வட்டன்விளை கோயிலில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

உடன்குடி அருகே வட்டன்விளையில் உள்ள அருள்மிகு பாதக்கரை முத்து சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது.

News image
வட்டன்விளை அருள்மிகு பாதக்கரை முத்து சுவாமி.
Updated On :5 செப்டம்பர் 2024, 11:38 pm

Din

உடன்குடி அருகே வட்டன்விளையில் உள்ள அருள்மிகு பாதக்கரை முத்து சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் சுமாா் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை மாலை மங்கல இசையுடன் தொடங்கியது. பின்னா், பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளி, சனிக்கிழமை (செப். 6, 7) பல்வேறு ஹோமங்கள், யாகசாலை பூஜைகள், தீபாராதனை, மகா தீபாராதனை, யந்திர ஸ்தாபனம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (செப். 8) அதிகாலை 4 மணிக்கு மங்கள வாத்தியம், 4ஆம் கால யாக பூஜைகளைத் தொடா்ந்து, 8 மணிக்கு கோயில் விமான கும்பாபிஷேகம், மூலாலய மூா்த்திக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெறும்.

ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவா் ஜெயராஜ், நிா்வாகிகள் செய்துள்ளனா்.