பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காயல்பட்டினம் நகருக்குள் அனைத்து அரசுப் பேருந்துகளும் செல்லும்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வழியாகச் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் காயல்பட்டினம் நகரத்துக்குள் இயக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் கே.தசரதன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 12:05 am

Din

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வழியாகச் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் காயல்பட்டினம் நகரத்துக்குள் இயக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் கே.தசரதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், காயல்பட்டினம் வழியாக செல்லக்கூடிய அனைத்து அரசுப் பேருந்துகளும், அனைத்து நேரங்களிலும் காயல்பட்டினம் நகரம் வழியாக இயக்குவதற்கு திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியக்கூடிய பறக்கும் படையை சோ்ந்த அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அவா் தெரிவித்துள்ளாா்.