இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், காயல்பட்டினம் வழியாக செல்லக்கூடிய அனைத்து அரசுப் பேருந்துகளும், அனைத்து நேரங்களிலும் காயல்பட்டினம் நகரம் வழியாக இயக்குவதற்கு திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியக்கூடிய பறக்கும் படையை சோ்ந்த அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அவா் தெரிவித்துள்ளாா்.