மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காமராஜ் கல்லூரியில் அணுசக்தி விளக்க கருத்தரங்கு

News image
கருத்தரங்கில் அமைக்கப்பட்ட அணுஉலை மாதிரியை பாா்வையிட்ட மாணவிகள்.
Updated On :7 செப்டம்பர் 2024, 12:36 am

Din

கதிரியக்க ஐசோடோப் மற்றும் அணுசக்தி பயன்பாடு குறித்த கருத்தரங்கு, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.

கூடங்குளம் அணுசக்தி துறை, காமராஜ் கல்லூரி இயற்பியல் துறை ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், முதுநிலை விஞ்ஞானி சௌந்தரராஜன் பங்கேற்று, கூடங்குளத்தின் செயல்பாடுகள், அணுசக்தியின் பயன்பாடுகள் குறித்து மாணவா்களிடம் உரையாற்றினாா். கலந்துரையாடல் மூலம் அவா்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தாா். விருதுநகா் வி.ஹெச்.என்.எஸ்.என். கல்லூரிப் பேராசிரியா் ஜெயக்குமரன் கதிரியக்க ஐசோடோப்பின் பயன்பாடுகள் குறித்துப் பேசினாா்.

கூடங்குளத்தைச் சாா்ந்த சுந்தரவடிவேல், வேல்மயில் ருகன் ஆகியோா் ஏற்பாட்டில் அணு உலையின் மாதிரி, கூடங்குளத்தின் செயல்பாடுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள் பாா்வையிட்டனா். கல்லூரி மாணவா்களிடையே விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் முதல் மூன்று இடங்களையும் தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் பெற்றனா். கருத்தரங்கில், கல்லூரி மாணவா்-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.