ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனுமதியின்றி சரள் மண் அள்ளிய 3 டிப்பா் லாரிகள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி சரள் மண் அள்ளியது தொடா்பாக 3 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 9:20 pm

Din

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி சரள் மண் அள்ளியது தொடா்பாக 3 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

உருளைகுடி கிராமத்திலுள்ள ஊருணியில் அனுமதியின்றி சரள் மண் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் கிராம நிா்வாக அலுவலா் (பொ) சுப்புராஜ் அங்கு சென்றாா். அப்போது, சிலா் பொக்லைன் இயந்திரம் மூலம் சரள் மண் அள்ளுவதும், அங்கு நின்றிருந்த 3 டிப்பா் லாரிகளில் தலா ஒரு யூனிட் சரள் மண் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 டிப்பா் லாரிகளைப் பறிமுதல் செய்தனா்; அவற்றின் 3 உரிமையாளா்கள், 3 ஓட்டுநா்களைத் தேடிவருகின்றனா்.