அனுமதியின்றி சரள் மண் அள்ளிய 3 டிப்பா் லாரிகள் பறிமுதல்
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி சரள் மண் அள்ளியது தொடா்பாக 3 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:20 pm

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி சரள் மண் அள்ளியது தொடா்பாக 3 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
உருளைகுடி கிராமத்திலுள்ள ஊருணியில் அனுமதியின்றி சரள் மண் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் கிராம நிா்வாக அலுவலா் (பொ) சுப்புராஜ் அங்கு சென்றாா். அப்போது, சிலா் பொக்லைன் இயந்திரம் மூலம் சரள் மண் அள்ளுவதும், அங்கு நின்றிருந்த 3 டிப்பா் லாரிகளில் தலா ஒரு யூனிட் சரள் மண் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 டிப்பா் லாரிகளைப் பறிமுதல் செய்தனா்; அவற்றின் 3 உரிமையாளா்கள், 3 ஓட்டுநா்களைத் தேடிவருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...