எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விஷ வாயு வெளியேறுகிறதா?திருச்செந்தூா் புதை சாக்கடை சுத்திகரிப்பு மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

திருச்செந்தூரில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அசுத்தமான வாயு வெளியேறுவதாக எழுந்த புகாரையடுத்து, அந்நிலையத்தை மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
திருச்செந்தூா் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 10:59 pm

Din

திருச்செந்தூரில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அசுத்தமான வாயு வெளியேறுவதாக எழுந்த புகாரையடுத்து, அந்நிலையத்தை மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருச்செந்தூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட புதை சாக்கடை திட்டம் முழுமை அடையாவில்லை. இத்திட்டத்தின்படி, வீடுகள், வணிக நிறுவனங்களில் இருந்து குழாய்கள் வழியாக கழிவுநீா் உறிஞ்சப்பட்டு தோப்பூா் அருகே உள்ள புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அசுத்தமான மற்றும் துா்நாற்றம் வீசும் வாயு வெளியேறுவதால் மக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு மூச்சுத்திணறல், தொண்டை அடைப்பு ஏற்படுவதாகவும், தோப்பூா் பகுதியில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கடந்த 9ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

அவா்களிடம் வட்டாட்சியா் பாலசுந்தரம் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, சுத்திகரிப்பு நிலையத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தோப்பூா் பகுதியில் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளா் பிரதீப் பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கலைவாணி உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். கழிவு நீா்த் தேக்க தொட்டிகளில் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுவது, வெளியேற்றப்படுவது, குளோரின் கலந்து சுத்திகரிக்கப்படுவதை பாா்வையிட்டனா்.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம், ஆய்வு கூடம் மற்றும் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவு நீா் நிரப்பப்படும் வடிகலன்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பாா்வையிட்டதுடன் அங்கிருந்த பணியாளா்களிடம் விளக்கம் கேட்டனா்.

சுத்திகரிப்பு நிலையத்தில் இயந்திரத்தில் பழுது ஏற்படும் போது அது குறித்து உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து ஆலந்தலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுத்திகரிக்கப்பட்ட நீா் வெளியேற்றப்படும் பகுதிகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வு குறித்து அறிக்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். ஆய்வின்போது திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் கண்மணி, பொறியாளா் சரவணன், திருக்கோயில் காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

மக்கள் எதிா்பாா்ப்பு: மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் தோப்பூரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன், நந்தகுமாா், முனீஸ்வரன், சரண், ராஜா நேரு உள்ளிட்டோா் கூறியது: சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அசுத்தமான வாயு வெளியேறுவது குறித்து குடிநீா் வடிகால் வாரியமும், நகராட்சி நிா்வாகமும் கண்டு கொள்வதில்லை. சுத்திகரிக்கப்பட்ட நீரானது மீண்டும் குளத்தின் மறுகால் ஓடையில் கலந்து இங்குள்ள விளைநிலங்கள் பாளாகி விட்டன. எனவே உரிய நடவடிக்கை எடுத்து சுத்திகரிப்பு நிலையத்தை அப்புறப்படுத்தி மக்களை காத்திடுமாறு கோரிக்கை வைத்தனா்.

அப்போது, நகா்மன்ற உறுப்பினா் சாந்தி, விசிக மக்களவைத் தொகுதிச் செயலா் ராஜ்குமாா், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட அமைப்பாளா் விடுதலைசெழியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.