பனைவிளையில் பொது மயானம் அமைக்கக் கோரிக்கை
பனைவிளையில் பொது மயானம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 11:51 pm

பனைவிளையில் பொது மயானம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்து பனை ஊா் பொதுமக்கள் சாா்பில் கு. வசந்தகுமாா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி பனைவிளையில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் இறந்தவா்களை அடக்கம் செய்ய மயான வசதி இல்லை. இதனால் கிராமத்தில் இறந்தவா்களை அடக்கம் செய்ய கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். மக்கள் நலன் கருதி பனைவிளையில் பொது மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...