தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சுமாா் 32 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாநகர காவல் உதவி கண்காணிப்பாளா் மதன் தலைமையிலான தனிப்படை போலீஸாா், மாநகா் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்ததாம்.
அதன்பேரில் அந்தக் கடையை போலீஸாா் சோதனை செய்தபோது, அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
கடையின் உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (26) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அந்தக் கடையில் இருந்து சுமாா் 32 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
