தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது.

News image

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியைப் பாா்வையிட்ட தக்காா் ரா. அருள்முருகன். உடன், இணை ஆணையா் சு. ஞானசேகரன்.

Updated On :23 ஆகஸ்ட் 2025, 8:02 pm

Syndication

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது.

இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பணிக்கு தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்தாா். இணை ஆணையா் சு. ஞானசேகரன் முன்னிலை வகித்தாா்.

இந்து சமய அறநிலையத் துறை முதுநிலை கணக்கு அலுவலா் ராஜாராமன், உதவி ஆணையா்கள் தங்கம், நாகவேல், அலுவலகக் கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் முத்துமாரியம்மாள், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image

சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா், கோயில் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

இதில், ரூ. 4 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 233, ஒரு கிலோ 5 கிராம் தங்கம், 18.16 கிலோ வெள்ளி, 17.5 கிலோ பித்தனை, 3.07 கிலோ செம்பு, 7.5 கிலோ தகரம், வெளிநாட்டு பணத்தாள்கள் 1,218 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.