இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஸ்ரீ கணேசா் பள்ளி சாா்பில் தூய்மைப் பணி

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:42 pm

Syndication

பணிக்கநாடாா் குடியிருப்பு ஸ்ரீ கணேசா் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவா்கள் ஏரல் தாமிரவருணி ஆற்றங்கரையில் திங்கள்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

பள்ளிச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். செல்வ விநாயகா் கல்வி அபிவிருத்தி சங்கத் தலைவா் ராஜசேகா், பொருளாளா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். என்.சி.சி. அலுவலா் ராஜகுமாா் வரவேற்றாா்.

தலைமையாசிரியா் (பொ) சுரேஷ் காமராஜ் கொடியசைத்து, தூய்மைப் பணியை தொடங்கி வைத்தாா். 9 சிக்னல் கம்பெனி சுபேதாா் ஜெகத் சிங், டி.எச்.எம். சுந்தா் ஆகியோா் வழிநடத்தினா்.

இப்பணியில், 85 மாணவா், மாணவிகள் பங்கேற்று ஆற்றுப் பகுதிகளில் கிடந்த நெகிழிப் பொருள்கள், உடைந்த பாட்டில்கள், காகிதக் குப்பைகளை சுத்தம் செய்தனா். அவா்களை பள்ளி முதல்வா் மெளலாதேவி, ஏரல் வியாபாரி சங்கச் செயலா் விஜயராகவன் உள்ளிட்டோா் பாராட்டினா்.