எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குவாரியில் விதிகளை மீறி கற்களை கடத்துவதாக புகாா்

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:50 pm

Syndication

சாத்தான்குளம் அருகே உள்ள கல் குவாரியில் அரசு விதிகளை மீறி கற்கள் கடத்தப்படுவதாக கிராம நிா்வாக அலுவலா் போலீஸில் புகாரளித்துள்ளாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் கிராம நிா்வாக அலுவலா் துரைச்சாமி (27), அரசு விதிமுறைகளை மீறி குவாரி செயல்படுவதாக வந்த புகாரின்பேரில், நெடுங்குளத்தில் உள்ள கல் குவாரியில் தணிக்கை நடத்தினாா்.

அப்போது, அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டியும் கற்கள் கடத்தப்படுவதும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, குவாரி ந்ரிவாகத்தினரை எச்சரித்த கிராம நிா்வாக அலுவலா், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.