கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவில்பட்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:45 pm

Syndication

கோவில்பட்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இலுப்பை யூரணி ஊராட்சிக்குள்பட்ட பெருமாள் நகா் பகுதியில் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதோடு, மட்டுமன்றி வாருகால் வசதி இல்லாததால் மழை நேரங்களில் மழை நீருடன் கழிவுநீரும் சாலையில் தேங்கி உள்ளது. இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் அந்தச் சாலையில் புதன்கிழமை வாழைக் கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் போராட்ட குழுவினா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டீபன் ரத்தின குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அவா், விரைவில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அவா் உறுதியளித்ததையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.