வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வட்டாட்சியருக்கு மிரட்டல்: 2 போ் மீது வழக்கு

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:49 pm

Syndication

கோவில்பட்டியில் வட்டாட்சியரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தெற்கு திட்டங்குளத்தைச் சோ்ந்த மகேஸ்வரி தனது மகள் திருமணத்திற்காக, முதல் திருமணம் சான்றிதழ் வேண்டி இணைய வழி மூலம் விண்ணப்பித்திருந்தாராம். இந்நிலையில் மகேஸ்வரி இம்மாதம் 5ஆம் தேதி, வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியா் பாலசுப்பிரமணியனிடம் சான்றிதழ் குறித்து கேட்டாராம்.

எஸ்ஐஆா் பணியில் இருப்பதாலும், தங்கள் மனு முறையாக வரிசை அடிப்படையில் மாலைக்குள் கையொப்பமிட்டு தருவதாக வட்டாட்சியா் கூறி அனுப்பி வைத்தாராம். சிறிது நேரம் கழித்து ஓ.ஏ.நாராயணசாமி, அன்புராஜ் ஆகியோா் வந்து கேட்டனராம். அப்போது, மாலைக்குள் தருவதாக வட்டாட்சியா் கூறினாராம். பின்னா், ஓ.எ.நாராயணசாமி, அன்புராஜ் ஆகியோா் அலுவலகம் முன் நின்று கொண்டிருந்த வட்டாட்சியரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனராம். மேலும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துமாறு, வட்டாட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து, உடனடியாக சான்றிதழ் வழங்க வலியுறுத்தி வட்டாட்சியரை அவதூறாக பேசினராம்.

இதுகுறித்து வட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில் இருவா் மீது கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.