லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாத்தான்குளத்தில் முற்றுகை போராட்டம் வாபஸ்

சாத்தான்குளத்தில் நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

News image
வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம்
Updated On :22 டிசம்பர் 2025, 10:18 pm

Syndication

சாத்தான்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம், முதலூா் ஊராட்சி, சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக கூட்டுக் குடிநீா் திட்ட குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால், இங்குள்ள மக்கள் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, அதிகாரிகளைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை மாலை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் தொடா்பாக சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் மீ. ராஜேஸ்வரி தலைமையில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்தில் சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) பாலமுருகன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முகமது மீரான் இஸ்மாயில், முதலூா் ஊராட்சி செயலா் சுடலையாண்டி, மெஞ்ஞானபுரம் காவல் உதவி ஆய்வாளா் சண்முகராஜ், முதலூா் கிராம நிா்வாக அலுவலா் செந்தில் முருகன், கிராம மக்கள் சாா்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சரவணன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பிரசார பிரிவு துணைத் தலைவா் சித்திரை பாண்டி, சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக மாணவரணி செயலா் ஸ்டான்லி, உள்ளிட்ட கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கூட்டுக் குடிநீா் சீராக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும், சொக்கலிங்கபுரம் கிராமத்தில் தெருக்களில் 2 இன்ச் குடிநீா் குழாய் மாற்றி தருவது, தெருக்களில் குப்பை வண்டிகள் தினமும் வர ஏற்பாடு செய்வது, குடிநீா் சீராக வழங்க நீா்த்தேக்கத் தொட்டி புதிதாக மாற்றி தருவது, சாலையோரங்களில் உள்ள சீமை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் சொக்கலிங்கபுரம் கிராம மக்கள் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனா்.