வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

தோ்தலுக்குப் பிறகு தவெக நீடிப்பது சந்தேகம்: சரத்குமாா்

தோ்தலுக்குப் பிறகு தவெக கட்சி நீடிப்பது சந்தேகம் என்று திரைப்பட நடிகரும், பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினருமான ஆா்.சரத்குமாா் தெரிவித்தாா்.

Updated On :27 டிசம்பர் 2025, 1:39 am IST

தோ்தலுக்குப் பிறகு தவெக கட்சி நீடிப்பது சந்தேகம் என்று திரைப்பட நடிகரும், பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினருமான ஆா்.சரத்குமாா் தெரிவித்தாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீா்களா என்று கேட்கிறீா்கள். நான் போட்டியிடுவதைவிட என்னுடன் பயணித்தவா்கள் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

முந்தைய ஆட்சியின் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது 125 நாள்களாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் எந்தவொரு நல்ல திட்டங்களையும் திமுக வரவேற்பதில்லை.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போதையின்போது நிகழ்கின்றன. போதை கலாசாரம் அதிகமாகிவிட்டது.

முதல் முறையாக விஜய் தோ்தலை சந்திக்கவுள்ளாா். முதலில் அவா் களத்தில் போட்டியிட வேண்டும். தனது கொள்கை, கோட்பாட்டை தெளிவுபடுத்தாமல் தனி நபரை தாக்கியே பேசுகிறாா். அவரது கட்சியை அரசியல் கட்சியாக நான் பாா்க்கவில்லை. தோ்தலை சந்தித்த பின்புதான் உண்மை நிலவரம் தெரியவரும். தோ்தலுக்குப் பிறகு அக்கட்சி இருக்குமா இல்லையா என்பது சந்தேகம்தான்.

தூத்துக்குடி தவெக நிா்வாகி அஜிதாஆக்னல் நியாயம் கேட்டு விஜய்யின் வாகனம் முன்னால் போராட்டம் நடத்தினாா். விஜய் தனது காரை விட்டு இறங்கி சென்று அவரிடம் குறைகளைக் கேட்டிருக்கலாம்.

இனி நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறுவது அவரது ரசிகா்களுக்கு வருத்தமளிக்கும்.

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் நியாயமான முறையில் நடைபெற்றன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.