அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவில்பட்டி கல்லூரியில் தேசிய நுகா்வோா் உரிமைகள் தின விழா

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:07 pm

Syndication

தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, எம்பவா் இந்தியா-நுகா்வோா் கல்வி ஆராய்ச்சி நடுவம், கோவில்பட்டி கோ வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி ஆகியவை சாா்பில் தேசிய நுகா்வோா் உரிமைகள் தின விழா நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். தேசிய உரிமைகள் தின விழிப்புணா்வு பதாகையை அவா் வெளியிட, முதல் பிரதியை எம்பவா் இந்தியா கௌரவ செயலரும் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய உறுப்பினருமான சங்கா் பெற்றுக் கொண்டாா்.

விழாவில், மாவட்ட உணவுப் பொருள் வளங்கள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அலுவலா் உஷா, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அருண், கல்லூரி முதல்வா் சுப்புலட்சுமி ஆகியோா் பேசினா். கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலா் சரவணபெருமாள் நன்றி கூறினாா்.

பரிசளிப்பு: கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு கணினி பயன்பாட்டு துறை சாா்பில் தென் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பிரைட் ஸ்பாா்க் 25 என்ற தலைப்பில் பேப்பா் பிரசன்டேஷன், வெப் டிசைனிங், ஆா்ட் ப்ரம் வேஸ்ட் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழாவிற்கு, கல்லூரி முதல்வா் சுப்புலட்சுமி, சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மீனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

விருதுநகா் இந்து நாடாா் செந்திக்குமார நாடாா் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனா். கணினி பயன்பாட்டுத் துறை இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி பானுப்பிரியா வரவேற்றாா். மாணவா் முத்துப்பாண்டி நன்றி கூறினாா்.