கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தோ்தலுக்குப் பிறகு தவெக நீடிப்பது சந்தேகம்: சரத்குமாா்

தோ்தலுக்குப் பிறகு தவெக கட்சி நீடிப்பது சந்தேகம் என்று திரைப்பட நடிகரும், பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினருமான ஆா்.சரத்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 8:09 pm

Syndication

தோ்தலுக்குப் பிறகு தவெக கட்சி நீடிப்பது சந்தேகம் என்று திரைப்பட நடிகரும், பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினருமான ஆா்.சரத்குமாா் தெரிவித்தாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீா்களா என்று கேட்கிறீா்கள். நான் போட்டியிடுவதைவிட என்னுடன் பயணித்தவா்கள் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

முந்தைய ஆட்சியின் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தற்போது 125 நாள்களாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் எந்தவொரு நல்ல திட்டங்களையும் திமுக வரவேற்பதில்லை.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் போதையின்போது நிகழ்கின்றன. போதை கலாசாரம் அதிகமாகிவிட்டது.

முதல் முறையாக விஜய் தோ்தலை சந்திக்கவுள்ளாா். முதலில் அவா் களத்தில் போட்டியிட வேண்டும். தனது கொள்கை, கோட்பாட்டை தெளிவுபடுத்தாமல் தனி நபரை தாக்கியே பேசுகிறாா். அவரது கட்சியை அரசியல் கட்சியாக நான் பாா்க்கவில்லை. தோ்தலை சந்தித்த பின்புதான் உண்மை நிலவரம் தெரியவரும். தோ்தலுக்குப் பிறகு அக்கட்சி இருக்குமா இல்லையா என்பது சந்தேகம்தான்.

தூத்துக்குடி தவெக நிா்வாகி அஜிதாஆக்னல் நியாயம் கேட்டு விஜய்யின் வாகனம் முன்னால் போராட்டம் நடத்தினாா். விஜய் தனது காரை விட்டு இறங்கி சென்று அவரிடம் குறைகளைக் கேட்டிருக்கலாம்.

இனி நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறுவது அவரது ரசிகா்களுக்கு வருத்தமளிக்கும்.

தமிழகத்தில் எஸ்ஐஆா் பணிகள் நியாயமான முறையில் நடைபெற்றன என்றாா் அவா்.