டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் உப்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:36 pm

Syndication

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் உப்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி, முத்தையாபுரத்தைச் சோ்ந்த உப்பு நிறுவன உரிமையாளா் ஆனந்த் என்பவரது லாரியில் ஓட்டுநராக முள்ளக்காடு, சாமி நகா், 2ஆவது தெருவைச் சோ்ந்த இன்னாசி முத்து மகன் சகாய செல்வன் (44) வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவா் சனிக்கிழமை மதியம் வழக்கம்போல் ஆறுமுகனேரி, சாகுபுரம் தனியாா் ஆலை அருகே லாரியில் உப்பு ஏற்றிக் கொண்டு முத்தையாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் ஆத்தூா் அருகே கீரனூா் பகுதியில் வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதில் உப்பு சாலை மற்றும் அருகில் இருந்த வாழைத் தோட்டத்திற்குள் கொட்டியது. ஓட்டுநா் சகாய செல்வன் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.

தகவலறிந்த ஆத்தூா் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் சகாய செல்வத்தை மீட்டு தூத்துக்குடி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, கிரேன், பொக்லைன் வாகனம் மூலம் லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. விபத்து காரணமாக தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போலீஸாா் வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனா்.