சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சட்ட விரோத மது விற்பனை: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:45 pm

Syndication

கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இன்பராஜ் தலைமையிலான போலீஸாா் கோவில்பட்டி-மந்திதோப்பு சாலையில் பாண்டவா் மங்கலம் செல்லும் பாதையில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் உள்ள கறிக்கடை அருகே சந்தேகத்திற்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து சோதனையிட்டனா். அவரிடம் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அவா் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவது தெரிய வந்தது.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மந்திதோப்பு, துளசிங்க நகரைச் சோ்ந்த தங்கராஜ் மகன் விக்னேஸ்வரனை (28) கைது செய்து, அவரிடம் இருந்த 26 மது பாட்டில்கள், ரொக்கம் ரூ. 600ஐ பறிமுதல் செய்தனா்.