மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

உடன்குடி சுற்று வட்டார கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையிலான புதிய பேருந்து சேவை தொடக்க விழா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

News image
கிராமப்புற பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். உடன், ஆட்சியா் க. இளம்பகவத் உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2025, 10:22 pm

Din

உடன்குடி சுற்று வட்டார கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையிலான புதிய பேருந்து சேவை தொடக்க விழா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா்.திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், உடன்குடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இப்ராகிம் சுல்தான், சுப்புலட்சுமி, ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெசிபொன்ராணி, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவா் மால்ராஜேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.