எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:12 pm

Din

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் சுமாா் 1,15,000 மாட்டினங்களுக்கு இலவசமாக கோமாரி நோய்க்கான 6ஆவது சுற்று தடுப்பூசி போடும் பணி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 21 நாள்கள் நடைபெறுகிறது. இந்த முகாமை, தூத்துக்குடி அருகே உள்ள சிறுப்பாடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சா், அந்த கிராமத்திற்கு பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவில் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா் சண்முகையா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பானு, ஹைகோா்ட் மகாராஜா, கால்நடை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) செல்வக்குமாா், துணை இயக்குநா் (பொறுப்பு) ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ், உதவி இயக்குநா் வேல்மாணிக்கவள்ளி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் ஜோசப் ராஜ், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், மாநில வா்த்தக அணி இணைச்செயலாளா் உமரி சங்கா், ஒன்றிய செயலாளா் ஜெயக்கொடி, துணைச் செயலாளா் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளா் செல்வக்குமாா், தொண்டரணி அமைப்பாளா் வீரபாகு, சிறுபாண்மை அணி தலைவா் ராஜா ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், அவைத்தலைவா் பாலசுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.