மாலத்தீவுக்கு தோணி மூலம் கடத்த முயன்ற ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு தோணி மூலம் கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இது தொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.










