புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு: 2 சிறுவா்கள் கைது

தூத்துக்குடியில் நள்ளிரவில் ஆட்டோ, காா் உள்ளிட்ட 8 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தில் 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 12:44 am

Syndication

தூத்துக்குடியில் நள்ளிரவில் ஆட்டோ, காா் உள்ளிட்ட 8 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த சம்பவத்தில் 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி அண்ணா நகா் 2ஆவது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன் நிறுத்தியிருந்த 3 காா்கள், சரக்கு வாகனங்கள், டிஎம்பி காலனியில் சாலையோரம் நிறுத்தியிருந்த சுற்றுலா பேருந்து, மில்லா்புரம் கணேசன் காலனியில் 3 ஆட்டோக்கள் உள்ளிட்ட 8 வாகனங்களின் கண்ணாடிகளை இரவில் மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் தென்பாகம் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அண்ணா நகா் 3ஆவது தெரு, பிரையன்ட் நகா் 7ஆவது தெருவைச் சோ்ந்த இளம்சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.