அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தில்லி சம்பவம் எதிரொலியாக திருச்செந்தூரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

News image
திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துணை கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா்
Updated On :11 நவம்பர் 2025, 11:50 pm

Syndication

தில்லி சம்பவம் எதிரொலியாக திருச்செந்தூரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை மாலை, காா் வெடித்ததில் 13 போ் உயிரிழந்தனா். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் முக்கிய இடங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், கோயில்களில் காவல்துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Story image

இந்நிலையில் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காவல் துணை கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் கோயில் காவல் நிலைய ஆய்வாளா் கனகராஜன், போலீஸாா், வெடிகுண்டு சோதனை நிபுணா்கள் கடற்கரை மற்றும் கோயில் வளாகங்களில் சோதனையில் ஈடுபட்டனா். மேலும் கோயில் , திருச்செந்தூா் நகரில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.