அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் - வழக்குரைஞா்கள் வாக்குவாதம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 6:42 pm

Syndication

தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த நபரை வேறு வழக்கில் கைது செய்ய முயன்ால், போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கும் இடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரைச் சோ்ந்தவா் சிவா (40). இவா் ஒரு கொலை வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வியாழக்கிழமை வந்தாா்.

இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்றத்துக்கு வந்த சிவாவை போலீஸாா் கைது செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் வழக்குரைஞா்கள் நீதிமன்ற வளாகத்தில் போலீஸாா் கைது செய்யக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, ஏஎஸ்பி மதன் தலைமையில் ஏராளமான போலீஸாா் நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாருக்கும், வழக்குரைஞா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து சிவாவை காவல் துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து வழக்குரைஞா் சங்கத் தலைவா் வாரியாா் கூறும்போது, கைது செய்வதற்கு நாங்கள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்துக்கு வெளியில்தான் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றாா்.