தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆறுமுகனேரியில் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து பாதிப்பு

ஆறுமுகனேரியில் ரயில்வே கேட்டில் திடீா் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 8:18 pm

Syndication

ஆறுமுகனேரியில் ரயில்வே கேட்டில் திடீா் பழுது ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூரி­ருந்து திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை மாலை 6.15 மணியளவில் பயணிகள் ரயில் புறப்பட்டு ஆறுமுகனேரி நிலையத்திற்கு 6.30 மணிக்கு வந்தது.

அப்போது, மூடப்பட்ட ரயில்வே கேட்டை கீப்பா் திறக்க முயன்றபோது, ‘ஆட்டோ லாக்’ பழுதாகி செயல்படவில்லை. ரயில் நிலைய அதிகாரி, பணியாளா்கள் மூலம் ரயில்வே கேட்டை திறப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது ஆட்டோ லாக் போல்ட் கழன்ால் கேட்டை திறக்க முடியவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தற்கா­லிகமாக லாக் விடுவிக்கப்பட்டு 7 மணியளவில் ரயில்வே கேட் திறக்கப்பட்டது.

இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூா் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறமும் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்ால் அந்த இடத்தை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா்.