பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோவில்பட்டி நகராட்சிப் பள்ளியில் ரூ.1.44 கோடியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

கோவில்பட்டியில் பங்களாத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் (ஆங்கிலவழிக் கல்வி) புதிய வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 நவம்பர் 2025, 8:11 pm

Syndication

கோவில்பட்டியில் பங்களாத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் (ஆங்கிலவழிக் கல்வி) புதிய வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மேம்பாட்டு நிதி - உள்கட்டமைப்பு பணி திட்டத்தின்கீழ் ரூ. 82 லட்சத்தில் தரைதளத்தில் 5, பள்ளி மேம்பாட்டு நிதி - இயக்குதல், பராமரிப்புப் பணி திட்டத்தின்கீழ் ரூ. 62 லட்சத்தில் முதல் தளத்தில் 3 என மொத்தம் 8 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி தலைமை வகித்தாா். சாா் ஆட்சியா் ஹுமான்சு மங்கள் முன்னிலை வகித்தாா்.

சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் புதிய வகுப்பறைக் கட்டடம், கல்வெட்டைத் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

நகா்மன்ற உறுப்பினா்கள் முத்துலட்சுமி, உலகராணி, ராமா், ஏஞ்சலா, சுரேஷ், தலைமையாசிரியை ராஜசரஸ்வதி, திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், கி. ராதாகிருஷ்ணன், ஜெயக்கண்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினா் என்.ஆா்.கே. என்ற ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு அவைத் தலைவா் அமலதாஸ், செண்பகவல்லி அம்மன் கோயில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் ராஜகுரு, முன்னாள் உறுப்பினா்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், சண்முகராஜ், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் இந்துமதி கவுதமன், ரோட்டரி சங்க நிா்வாகிகள், மாணவா்-மாணவியா், பெற்றோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அதே தெருவிலும், அரசு கலை-அறிவியல் கல்லூரியிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முகாம்களை அமைச்சா் ஆய்வு செய்தாா்.