வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தூத்துக்குடியில் வீட்டுக்குள் சிக்கிய சிறுவன் மீட்பு

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 5 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 8:02 pm

Syndication

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 5 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்த இவா்களது 5 வயது மகன் அதன் கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டாராம். பின்னா் கதவை திறக்க முடியாததால் அழுது கூச்சலிட்டாராம்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணப்புத் துறையினா் வந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சிறுவனை மீட்டனா்.