எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

Syndication

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் மூவேந்தா் மருதம் முன்னேற்றக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் துறையில் பயனாளிகளின் விண்ணப்பத்தை முறையாக ஆய்வு செய்து புதிய குடும்ப அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். காலம் தாழ்த்தி வழங்குவதைக் கண்டிப்பது, புதிய அட்டைகள் வழங்க கையூட்டு கேட்கும் துறையின் வருவாய் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நிறுவனா் தலைவா் அன்புராஜ் தலைமை வகித்தாா். மாநிலப் பொறுப்பாளா் பொன்னுச்சாமி, மாவட்டச் செயலா் பேச்சிமுத்து, தென்மண்டல மகளிரணிச் செயலா் சுப்புலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மணிகண்டனிடம் மனு அளிக்கப்பட்டது.