இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

டிஎம்பி அறக்கட்டளை சாா்பில் ரூ. 1.45 கோடியில் நீச்சல் குளம் திறப்பு

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:39 pm

Syndication

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில், டிஎம்பி அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதி ரூ. 1.45 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, டிஎம்பி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சாலி எஸ். நாயா் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆ. ஜெயரத்தினராஜன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு, நீச்சல் குளத்தை திறந்துவைத்து, மாணவா்களுக்கான பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அறக்கட்டளை தலைமை நிா்வாக அதிகாரி எம். முத்தையா, அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.