பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

எலெக்ட்ரிக் பைக் நிறுவன சேவை குறைபாடு: ரூ.1.64 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:40 pm

Syndication

சேவை குறைபாடு காரணமாக வாடிக்கையாளருக்கு எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் ரூ.1.64 லட்சம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்தவா் அருண் சக்திவேல். இவா், திருச்செந்தூா் குமாரபுரத்திலுள்ள எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்குவற்கு முழுத் தொகையையும் செலுத்தியுள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனம், ஒப்புக்கொண்டபடி 10 நாள்களுக்குள் பைக்கை வழங்கவில்லையாம்.

ஆனால், 3 மாதங்களுக்குப் பின், பைக் வழங்கப்பட்டுவிட்டதாக இவரது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.இதுகுறித்து அந்நிறுவனத்திடம் கேட்டபோது, வாகனம் வேறு ஒருவரின் பெயரில் வந்துள்ளதாக கூறியுள்ளனா்.

இதில் அதிருப்தி அடைந்த அவா், வழக்குரைஞா் மூலம் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லையாம். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் வழக்குத் தொடா்ந்தாா்.

இவ்வழக்கை தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் அதன் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, ஏற்கெனவே செலுத்திய முழுத் தொகையான ரூ.1,04,235, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.1,64,235-ஐ ஆறு வாரத்துக்குள் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் தொகையை செலுத்தும் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.