எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் படகு ஓட்டுநா் உரிமச் சான்றிதழ் அளிப்பு

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:39 pm

Syndication

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நான் முதல்வன், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஒரு வாரம் உள்வளாக படகு ஓட்டுநா் உரிமச் சான்றிதழ் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் (பொ) சா. ஆதித்தன் தலைமை வகித்தாா். நாகா்கோவில், தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் கோ.து. கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சித் திட்டத்தை முடித்த மீனவா்களுக்கு படகு ஓட்டுநா் உரிமத்தை வழங்கினாா்.

மீன்வளத் துறை உதவி இயக்குநா் வெ. தீபா, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் எஸ்.பி. லட்சுமிகாந்தன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

உதவிப் பொறியாளா் அ. அந்தோணி மைக்கேல் பிரபாகா் நன்றி கூறினாா்.