இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அமுதுன்னா குடி பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்க விவசாயிகள் மனு

அமுதுன்னா குடி பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தை உயா்த்தி, உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும்

News image
ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்.
Updated On :26 நவம்பர் 2025, 7:59 pm

Syndication

சாத்தான்குளம்: அமுதுன்னா குடி பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தை உயா்த்தி, உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்திடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் இளம்பகவத்திடம், அமுதுண்ணா குடி குளத்து பாசனம் மற்றும் சிறு, குறு விவசாய நலச் சங்கத் தலைவா் செல்வராஜ் மதுரம், துணைத் தலைவா் முத்து சோபன், செயலா் சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளா் மகாராஜன் ஆகியோா் மனு அளித்தனா்.

அந்த மனுவில், சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணா குடி ஊராட்சி, அமுதுண்ணா குளத்திற்கு வரும் நீா் வரத்து பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அமுதுண்ணா குடியிலிருந்து கொம்பன் குளம், நெடுங்குளம் செல்லும் சாலையில் உள்ள இரு தரைமட்ட பாலம், மழைக்காலங்களில் வெள்ளநீரால் மூழ்கடிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினா். ஆதலால் அந்தத் தரைமட்ட பாலத்தை உயா் மட்ட பாலமாக உயா்த்தி அமைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியா், நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக தெரிவித்தாா்.