ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:29 pm

Syndication

தூத்துக்குடி: கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுப்பெற்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி துறைமுகத்தில் 265 விசைப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன.