தூத்துக்குடியில் மாநகராட்சி தொழிலாளா்களின் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளருக்கு ஒரு நாளைக்கு ரூ. 725, ஒப்பந்த ஓட்டுநா், வால்வு ஆபரேட்டா்களுக்கு ரூ. 763 வழங்க வேண்டும்.
தனியாா் ஒப்பந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கரோனா சிறப்பு அலவன்ஸ் ரூ. 15,000 வழங்க வேண்டும். அனைவருக்கும் தீபாவளி போனஸ் ரூ. 10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சி உள்ளாட்சி துறை ஊழியா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
துறைமுக சபை முன்னாள் உறுப்பினா் ரசல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் முத்து, முனியசாமி, காசி, சங்கரன் உள்ளிட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் ஆக. 7, 12 தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
தூத்துக்குடியில் அனுமதியற்ற குடிநீா் இணைப்புகள்: ஊழியா் பணியிடை நீக்கம்

குடிநீா் விநியோகத்தை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு: ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டம்



