திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தூத்துக்குடி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு அமல்

தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செவ்வாய்க்கிழமை முதல் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் கனரக வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினா்.

News image

சுங்கச்சாவடி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 4:10 am IST

தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செவ்வாய்க்கிழமை முதல் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் கனரக வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினா்.

சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப். 1ஆம் தேதி நள்ளிரவு முதல் வாகைகுளம் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

சுமாா் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதால், காா், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ. 5 முதல் 10 வரையும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ. 25 முதல் 40 வரையும் கட்டணம் உயா்ந்துள்ளது.

இதன் காரணமாக காா், வேன், கனரக வாகன ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கட்டண உயா்வை உடனடியாக நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மற்றும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.