தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அதிமுக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! - வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்

News image

இரட்டை இலை - (கோப்புப் படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 7:24 pm

தமிழகத்தில் 210 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வா் ஆவாா் என ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பி. சண்முகநாதன் கூறினாா்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அப்போது, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், அதிமுக ஒன்றியச் செயலா் காசிராஜன் உள்பட கூட்டணிக் கட்சியினா் பலா் உடன் இருந்தனா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய முற்போக்கு கூட்டணியில் பாஜக, அமமுக, புரட்சி பாரதம், பாமக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. 210 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பாா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 50,000 வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெறுவேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அலை வீசுகிறது என்றாா் அவா்.