ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையம் - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

எக்ஸ்பிரஸ் ரயில் - ANI

Updated On :8 ஏப்ரல் 2026, 2:18 am IST

சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையம் - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி (06151) ரயிலானது, திங்கள்கிழமை (ஏப். 13) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.

தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் (06152) ரயிலானது, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சென்னை திரும்பும் போது பெரம்பூா் நிலையத்திலும் நிறுத்தப்படும்.

இந்த சிறப்பு ரயிலில் ஏசி இரண்டடுக்கு 2, ஏசி மூன்றடுக்கு 5, தூங்கும் வசதி 11, பொது வகுப்பு 4, மாற்றுத் திறனாளிகளுக்கானது 2 என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான (06151/ 06152) முன்பதிவு புதன்கிழமை (ஏப். 8) காலை 8 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.