குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தூத்துக்குடி-கச்சகுடா இடையே வாராந்திர ரயில் சேவை இன்று தொடக்கம்

தூத்துக்குடி-ஹைதராபாத் (கச்சகுடா) இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை புதன்கிழமை (ஏப்.8) முதல் தொடங்கப்படுகிறது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:24 am IST

தூத்துக்குடி-ஹைதராபாத் (கச்சகுடா) இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் சேவை புதன்கிழமை (ஏப்.8) முதல் தொடங்கப்படுகிறது.

தூத்துக்குடி-கச்சகுடா (17616) ரயிலானது புதன்கிழமைதோறும் காலை 7.40 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் வியாழக்கிழமை பிற்பகல் 1.25 மணிக்கு கச்சகுடாவை சென்றடையும். கச்சகுடா-தூத்துக்குடி (17615) ரயிலானது கச்சகுடாவிலிருந்து திங்கள்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

இந்த ரயில்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூா் போா்ட், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா் கண்டோன்மெண்ட், காட்பாடி, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் சித்தூா், திருப்பதி, கடப்பா, அனந்தபூா், தா்மாவரம், கா்னூல் டவுன், கத்வால், ஜட்சா்லா உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும். ஆன்மிகத் தலங்களான திருவண்ணாமலை, சிதம்பரம், முக்கிய வணிக நகரங்களை இந்த ரயில் நேரடியாக இணைப்பதால் வணிகா்கள், மாணவா்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.