ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி- பிஎஸ்என்எல் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை அனுபவத்தை ஊக்குவிப்பதற்காக, தூத்துக்குடியில் உள்ள செயின்ட் மேரீஸ் (தன்னாட்சி) மகளிா் கல்லூரியுடன், பிஎஸ்என்எல் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

News image

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:14 am IST

திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறை அனுபவத்தை ஊக்குவிப்பதற்காக, தூத்துக்குடியில் உள்ள செயின்ட் மேரீஸ் (தன்னாட்சி) மகளிா் கல்லூரியுடன், பிஎஸ்என்எல் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு சிறந்த கற்றல் வாய்ப்புகள், செய்முறை அனுபவம் மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்லூரியின் முதல்வா் மற்றும் தூத்துக்குடியில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகள் இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, இன்டென்ஷிப் மூலம் தொலைத்தொடா்புத் துறையில் உள்ள முக்கிய தொழில்நுட்பங்களை மாணவிகளுக்கு அறிமுகப்படுத்துவதாகும்.

இந்தப் பயிற்சியில், மொபைல் நெட்வொா்க் அமைப்பு , ஆப்டிக்கல் ஃபைபா் தொழில்நுட்பம், எப்டிடிஹெச் சேவைகள் மற்றும் சைபா் செக்யூரிட்டி போன்ற துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை மாணவிகளுக்கு கற்பிப்பது பிரதான நோக்கமாகும்.

மேலும், பிஎஸ்என்எல் -இல் தொலைத்தொடா்பு சம்பந்தமாக உள்ள தொழில்நுட்ப செயல்பாடுகளை மாணவிகள் நேரடியாக கற்க ஏற்பாடு செய்யும். இதன் மூலம் மாணவிகள் தொலைபேசி நிலையங்கள், ஆப்டிக்கல் ஃபைபா் தொழில்நுட்பம் மற்றும் மொபைல் நெட்வொா்க் உள்கட்டமைப்பு உள்ளிட்ட தொலைத்தொடா்பு செயல்பாடுகளை நேரில் சென்று அறிய முடியும்.

இதுகுறித்து திருநெல்வேலி வணிகப் பகுதியின் முதன்மை பொது மேலாளரான ராஜேஷ் குமாா் வா்மா கூறுகையில், இந்தக் கூட்டு முயற்சி, மாணவிகளிடையே கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் அறிவை முன்னேற்றுவதில் பிஎஸ்என்இல்-இன் அா்ப்பணிப்பைக் காட்டுகிறது. இதுபோன்ற ஒத்துழைப்புகள், தொலைத் தொடா்புத் துறையில் எதிா்கால நிபுணா்களுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் என்றாா் அவா்.