சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையம் - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி (06151) ரயிலானது, திங்கள்கிழமை (ஏப். 13) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் (06152) ரயிலானது, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சென்னை திரும்பும் போது பெரம்பூா் நிலையத்திலும் நிறுத்தப்படும்.
இந்த சிறப்பு ரயிலில் ஏசி இரண்டடுக்கு 2, ஏசி மூன்றடுக்கு 5, தூங்கும் வசதி 11, பொது வகுப்பு 4, மாற்றுத் திறனாளிகளுக்கானது 2 என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான (06151/ 06152) முன்பதிவு புதன்கிழமை (ஏப். 8) காலை 8 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கன்னியாகுமரி - சென்னை ரயில் தாமத புறப்பாடு: பயணிகள் அவதி

போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை நீடிப்பு

சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



