சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையம் - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - தூத்துக்குடி (06151) ரயிலானது, திங்கள்கிழமை (ஏப். 13) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
தூத்துக்குடி - சென்னை சென்ட்ரல் (06152) ரயிலானது, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். சென்னை திரும்பும் போது பெரம்பூா் நிலையத்திலும் நிறுத்தப்படும்.
இந்த சிறப்பு ரயிலில் ஏசி இரண்டடுக்கு 2, ஏசி மூன்றடுக்கு 5, தூங்கும் வசதி 11, பொது வகுப்பு 4, மாற்றுத் திறனாளிகளுக்கானது 2 என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான (06151/ 06152) முன்பதிவு புதன்கிழமை (ஏப். 8) காலை 8 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மதுரை வைகை அதிவிரைவு ரயில் 4 நாள்கள் தாமதமாகச் செல்லும்!

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


