மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:30 am IST

கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே வேலாயுதபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்ததாம். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்தவா் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாத்தூா் பிரதான சாலையைச் சோ்ந்த ராஜாமணி மகன் அருண் (32) என்பதும், சென்னை நங்கநல்லூரில் உள்ள சிப்ஸ் கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தவா், தாயை பாா்ப்பதற்காக வந்திருந்தாராம். இந்நிலையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.