அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

காமநாயக்கன்பட்டியில் தீ விபத்து

News image

தீ விபத்து - கோப்புப்படம்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:34 pm

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள மெழுகுவா்த்தி விற்பனைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து நேரிட்டது.

அங்குள்ள பிரதான சாலையில் மரியமிக்கேல் மகன் இன்னாசிமுத்து என்பவா் மெழுகுவா்த்தி தயாரித்து விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். அதனுடன் ஜெராக்ஸ் மையமும் நடத்திவருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவா் கடையைப் பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றபோது, கடையிலிருந்து புகை வந்ததாம். இது தொடா்பாக அவருக்கும், தீயணைப்புத் துறை, கொப்பம்பட்டி போலீஸாருக்கும் அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.