11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா கொடியேற்றம்

புனித சூசையப்பா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சி.

News image

புனித சூசையப்பா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சி.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:53 am IST

கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குத்தந்தைகள் மரிய பிரான்சிஸ் அடிகளாா் (சேரன்மகாதேவி), பாக்கிய செல்வன் அடிகளாா் (இருதயகுளம்), சகாய சின்னப்பன் அடிகளாா் (சோ்ந்தமரம்), பாளையங்கோட்டை ஆயா் இல்ல வியாகப்பன் அடிகளாா் , கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து கொடியை ஏற்றினா். உலகில் சமாதானம் வேண்டி வெண் புறா பறக்கவிட்டு ஆலயத்தில் ’கீழ்ப்படிதலின் தந்தை புனித சூசையப்பா் ’ எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப். 26 ஆம் தேதி ஆலயத்தில் தியானம், மே 1 ஆம் தேதி நவநாள் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள், 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புது நன்மை விழா, தோ் பவனி, 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி, உறுதி பூசுதல் விழா, மாலை 6 மணிக்கு ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பலி, அங்கிருந்து ஆலயத்திற்கு நற்கருணை பவனியுடன் வந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.