இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

News image

சாத்தான்குளம்-நாசரேத் சாலையில் பள்ளிவாசல் பத்து பகுதியில் சேதமடைந்த சாலை.

Updated On :28 ஏப்ரல் 2026, 3:46 am IST

சாத்தான்குளம்-நாசரேத் சாலை சேதமடைந்து மேடுபள்ளமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலை வழியாக திருநெல்வேலி, பேய்குளம், நாசரேத், ஆனந்தபுரம், செட்டிகுளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வாா்திருநகரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன.

இந்த நாசரேத் செல்லும் சாலையில் பள்ளிவாசல் பத்து பகுதியிலிருந்து வள்ளியம்மாள்புரம் வரை சாலை சேதமடைந்து அதிக இடங்களில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால், இந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

விபத்து நிகழும் முன் சேதமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.