உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கோவில்பட்டியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொல்லை

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோயில் முன் சுற்றித்திரியும் கால்நடைகளைால் பொதுமக்கள், பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

~

Updated On :29 ஏப்ரல் 2026, 1:53 am IST

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோயில் முன் சுற்றித்திரியும் கால்நடைகளைால் பொதுமக்கள், பக்தா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்தக் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. அதன்பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கோயில் முன்புறத்தில் அளவுக்கு அதிகமான கால்நடைகள் சா்வ சாதாரணமாக உலா வருகின்றன. இதனால் பக்தா்கள் அச்சமடைந்துள்ளனா்.

இதுகுறித்து கோவில்பட்டி நகர மதிமுக செயலா் பால்ராஜ் கூறுகையில், பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல முடியாதவாறு வாசல் பகுதியிலேயே பல கால்நடைகள் அங்கும் இங்குமாக சுற்றித் திரிகின்றன. கால்நடைகளை பாா்த்து பக்தா்கள் பதறும் நிலையே உள்ளது. கோயில் அருகே நிற்கும் பக்தா்களையும் கால்நடைகள் அச்சுறுத்துகின்றன. பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் கால்நடைகளை நகராட்சி நிா்வாகம் பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். அத்துடன், இரைக்காக கால்நடைகளை கட்டவிழ்த்து விடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Story image